அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
இன்று ஞாயிற்றுக் கிழமை
அன்னையர் தினம்
கொண்டாட்டத்துக்குறிய நாள்
அன்னையிடம் ஆசி பெற்று
அவளுக்கு பரிசு தந்து
இன்று முழுவதும் அவளுடன்
இருக்க வேண்டும் !
பத்து மாதம் சுமந்து
பெற்று , பாதுகாத்து , வளர்த்து
இந்த சமுதாய சாக்கடையில்
நீந்த கற்று தந்தவள்
அல்லவா தாய் !
ஒவ்வொரு குழந்தைக்கும்
அதன் தாய் தெய்வம்- அல்லவா
தாய் இல்லாமல் நாம் இல்லை
தாயை சிறந்த கோவிலும்மில்லை
உண்மைத் தானே ?
அன்னையர் தினத்துக்கு
பரிசு தர வேண்டாமா ?
பரிசுடன் புறப்பட்டேன்
என்னை பெற்றதுக்கு - இலஞ்சம்
பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது
சென்ற ஆண்டு
அன்னையர் தினத்தில் பார்த்தது
ஆவலுடன் , பாசத்துடன்
புறப்பட்டேன் !
அன்னையைக் காண
என் அன்னை வாழும்
முதியோர் இல்லத்துக்கு !
நல்ல வேளை இன்று
ஞாயிறு விடுமுறை !
இல்லையேல் அடுத்த
ஆண்டு வரைக் காத்திருக்க
வேண்டும்!
அடுத்த அன்னையர் தினத்திற்கு !
அன்னையர் தினம் என்று
இல்லை என்றால்
பலர் தன் தாய்மாரை
மறந்திருப்பர் ....
No comments:
Post a Comment