Sunday, May 8, 2011

பெண்களைத் திருப்திப்படுத்த ஆண்களும் ஆண்களைத் திருப்திப் படுத்த பெண்களும் செய்ய வேண்டியவை.



தம்பதிகள் ஒருவரை ஒருவர் எப்படித் திருப்திப்படுத்துவது என்பதுதான் உலகம் தோன்றிய நாள் முதலாக உள்ள பெரிய பிரச்சனை. ஆனால் இந்தப் பிரச்சனை மற்றப் பிரச்சனைகள் போலப் பெரிதாகப் பேசப்படுவதில்லை. இது பற்றிய ஒரு ஆராய்ச்சி:
பெண்களைத் திருப்திப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டியவை:
1. இப்ப உள்ளதிலும் பார்க்க பெரிதாக ஒரு வீடு வாங்க வேண்டும்
2. அந்த வீட்டில் வசந்த் அண்ட் கோவில் உள்ள அத்தனை பொருட்களையும் வாங்கி நிரப்ப வேண்டும்.
3. கைநிறையப் பணம் வைத்திருக்க வேண்டும்.
4. வாரந்தோறும் ரங்கநாதன் தெருவிற்கு அழைத்துச் சென்று வேண்டியவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்
5. வாரந்தோறும் திரைப்படங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்
6. வாரந்தோறும் நல்ல உணவகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
7. அடிக்கடி அவர்கள் அழகாக இருகிறார்கள் அல்லது கவர்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.
8. ஒரு நாள் சொல்ல வேண்டும் இன்று நீ திரிஷாவைப் போலிருக்கிறாய் என்று. இன்னொரு நாள் சொல்ல வேண்டும் இன்று நீ தமனாவைப் போலிருக்கிறாய் என்று சொல்ல வேண்டும். அத்துடன் அடிக்கடி அவர்கள அங்கங்களையும் அவ்வப்போது பிரபலமான நடிகைகளின் அங்கங்களுடன் ஒப்பிட்டுச் சொல்லவேண்டும். உன் சிரிப்பு சுனைனா போலிருக்கிறது. இடை அனுஷ்க்கா போலிருக்கிறது. முக்கிய குறிப்பு நமிதாவை ஒப்பிட வேண்டாம். பிறது உதுகளை எல்லாம் பார்த்துக் கொண்டு திரிகிறியளோ என்று உதை வாங்க வேண்டி வரலாம்.
9. அவர்கள் சேலை உடுக்கும் போது பக்கத்தில் நின்றும் இருந்தும் மடிப்புக்க்களை சரியாக சரி செய்து விடவேண்டும்
10. அவர்களை அவர்களுக்குத் தேவைப்படும் போது நன்றாகத் திருப்திப்படுத்த வேண்டும்.
11. அவர்கள் நச்சரிப்புக்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
12. அவ்வப்போது அவர்கள் சொல்லும் உடல் வருத்தங்களை அவை போலியாக இருந்தாலும் கரிசனையுடன் கேட்டு அதற்கு பணம் செலவழித்து வைத்தியம் செய்ய வேண்டும்.
13. அவர்களை சிரிக்கவைக்க நல்ல நகைச்சுவைகள் சொல்லவேண்டும்
14. அவர்களின் உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
15. உங்களின் உறவினர்கள் பற்றி அவர்கள் சொல்லும் குறைகளை ஆமோதிக்க வேண்டும்.
16. தொலைக்காட்சி(சென்னைத் தமிழில் டிவி) ரிமோட்டை அவர்கள் கைகளிலேயே விட்டு விடவேண்டும்
17. அவர்களுடன் இருந்து தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டும்
18. அவர்கள்மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
19. அவர்கள் மணித்தியாலக் கணக்காக தொலைபேசியில் கதைக்க அனுமதிக்க வேண்டும்.
20. பல இடங்களுக்கும் நாடுகளுக்கும் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
21. பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும்
22. அவர்கள் செய்வதில் எவற்றை கண்டுக்காமல் இருக்க வேண்டும் எவற்றின்மீது கரிசனை காட்ட வேண்டும் என்பவற்றை அறிந்திருக்க வேண்டும்.
23. அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்
24. அவர்கள் மீது அன்பாயிருக்க வேண்டும்.
25 அவர்கள் மீது ஆசையாய் இருக்க வேண்டும்.
26. இப்போது மீண்டும் முதலாவதிற்கு சென்று அங்கிருந்து தொடரவும்.


ஆண்களைத் திருப்திப் படுத்த பெண்கள் செய்ய வேண்டியவை:
கவர்ச்சிகரமான உடையுடன் நல்ல சாப்பாட்டுடன் அவர்கள் முன் நிற்க வேண்டும்

Saturday, May 7, 2011

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!





அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! 

இன்று ஞாயிற்றுக் கிழமை 
அன்னையர் தினம் 
கொண்டாட்டத்துக்குறிய நாள் 
அன்னையிடம் ஆசி பெற்று 
அவளுக்கு பரிசு தந்து 

இன்று முழுவதும் அவளுடன் 
இருக்க வேண்டும் ! 
பத்து மாதம் சுமந்து 
பெற்று , பாதுகாத்து , வளர்த்து 
இந்த சமுதாய சாக்கடையில் 
நீந்த கற்று தந்தவள் 
அல்லவா தாய் ! 

ஒவ்வொரு குழந்தைக்கும் 
அதன் தாய் தெய்வம்- அல்லவா 
தாய் இல்லாமல் நாம் இல்லை 
தாயை சிறந்த கோவிலும்மில்லை 
உண்மைத் தானே ? 


அன்னையர் தினத்துக்கு 
பரிசு தர வேண்டாமா ? 
பரிசுடன் புறப்பட்டேன் 
என்னை பெற்றதுக்கு - இலஞ்சம் 


பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது 
சென்ற ஆண்டு 
அன்னையர் தினத்தில் பார்த்தது 
ஆவலுடன் , பாசத்துடன் 
புறப்பட்டேன் ! 

அன்னையைக் காண 

என் அன்னை வாழும் 
முதியோர் இல்லத்துக்கு ! 
நல்ல வேளை இன்று 
ஞாயிறு விடுமுறை ! 
இல்லையேல் அடுத்த 
ஆண்டு வரைக் காத்திருக்க 
வேண்டும்! 

அடுத்த அன்னையர் தினத்திற்கு ! 
அன்னையர் தினம் என்று 
இல்லை என்றால் 
பலர் தன் தாய்மாரை 
மறந்திருப்பர் ....

Friday, May 6, 2011

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?






வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?

எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.

யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?


பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?


அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.


இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.


'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்'
- ரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா


'தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.'
- விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.


ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.

இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

வணக்கம்....................

                        vetri heros னால் ஆரம்பிக்க பட்டிருக்கும் முதல் பதிவிற்கு பிரவேசிக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்,................................................